இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

November 7, 2009

திருக்குறளும் , என் குரலும் ....!

அதிகாரம் :13 அடக்கம் உடைமை

121)
அடக்கமே சொர்க்கம் அளிக்கும்; தவறின்
கடும்நரகம் தள்ளி விடுமுணர் - சுட்டும்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
----------------(16)

[முதல்குறள் ஈற்று = விடும் ; ஆசு = உணர்]

124)
நிலையில் வழுவா(து) அடங்கிவாழ் பவன்பிம்பம்
கல்மலையைக் காட்டிலும் மேலிங்கு - நிலைத்து
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
-----------(17)

[முதல்குறள் ஈற்று = மேல் ; ஆசு = இங்கு]

No comments: