இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 13, 2017

இருவரி கொண்டுன் .. கண்முன் வரவைப்பேன் ... காட்சி..!


இயற்கை:
1001)
மலைமுகட்டில், நிற்கும் மரக்கிளையில், தொங்கும்
இலைநுனியில், தூங்கும் பனி


1002)
தலைமேல் அமர்ந்த பனித்துளி, காய்ந்தால்,
தலைநிமிரும் புல்லின் நுனி


1003)
மூங்கிலிலை மேல்தூங்கும் நீர்த்துளி, கைதாகும்
பாயும் கதிரோன் ஒளி


1004)
மழைநின்ற மாலைப் பொழுது, நனைந்த
இலைகள் கவிழும் அழுது


1005)
மலையில் வழிந்தோடும் தண்ணீர் விழுது,
வழியாடும் ஆலம் விழுது


படங்கள் :




No comments: