1021)
மழைக்காலம் என்றொன்று இருந்ததாம் அன்று,
மழைநாட்கள் மட்டும்தான் இன்று
1022)
குடையென்ன செய்து விடமுடியும், ஓயாது
அடைமழை பெய்யும் பொழுது
1023)
தொடரும் கொடும்வெயிலை ஏற்கும் மனது
நடுங்கும், மழைவலுக்கும் போது
1024)
மழையில் ஒதுங்கநடை தேடி அலைவோரின்
கையில் விரியாக் குடை
1025)
குடைமறந்த நாளில், தவறாமல் வந்து
விடுமெனக்கு மட்டும் மழை
Tweet | |||||
No comments:
Post a Comment