இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 6, 2017

தேவன்வழி - 1.... மேய்ப்பாளனின் வாக்கு !!


வாழ்க உறவுகள் ....
தேவனின் மொழியும், தேவனின் வழியும் ...எல்லாரையும் சென்றடையும் வகையில், எளிய தமிழில், எளிய குறளில் என்நடையில் பதிக்கவேண்டும் ..என்னும் எனது கனவுத்திட்டத்தின் முதல்ப்படி இது .... அன்பு உள்ளங்கள் வழிகாட்டினால் தொடர்வேன் ..
( முக்கியக் குறிப்பு : வழிகாட்டி யாரும் இன்றி ... அவனை நம்பி.. சுயமாய் / சுயம்பாய்த் தொடங்கி இருக்கிறேன்... குற்றம் குறை இருந்தால், மாற்றுக் கருத்திருந்தால் குட்டிச் சொல்லுங்கள்... நன்றென நினைத்தால் தட்டி முன்செலுத்துங்கள் )
என்குறள்:- 975 - 980

நான்இருப்பேன் உன்னுடன், நான்பலம் தந்து
விடுவேன், திகையாது இரு

ஏசாயா 41:10

நல்லவற்றைப் போதிப்பேன், நீநடந்து செல்வதற்கு
நல்வழியைக் காட்டுவேன் நான்

ஏசாயா 48:17

என்சமுகம் உன்முன்னால் தான்செல்லும், உன்னோடு
இருந்துஇளைப் பாறவைப்பேன் நான்

யாத்திராகமம் 33:1

என்கிருபை என்பலம் போதும் உனக்கு,
பலவீனம் ஆகும் பொழுது

2கொரிந்தியர் 12:09

உன்வழியைக் காட்டுவேன் நானுனக்குப் போதிப்பேன்,
உன்மேல்கண் வைத்திருப்பேன் நான்

சங்கீதம் 32:08

No comments: