இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 12, 2017

தேவன்வழி - 2 :- அன்பு..!



என்குறள்:- 991 - 995

ஒருவரின் மேல்ஒருவர் அன்பாய் இருங்கள்,நான்
உம்மேல் இருப்பதைப் போல்

யோவான் 113:34

உன்மேல்,நீ கொண்டிருக்கும் அன்பைப்போல், கொள்பிறர்மேல்
என்பது அனைத்திற்கும் தீர்வு

கலாத்தியர் 05:14

பிறரிடத்தில் என்னஎதிர் பார்த்தாயோ. செய்வாய்
அதைநீ முதலில் அவர்க்கு

மத்தேயு 07:12

வருத்தமுடன் பாரம் சுமப்போரே, என்னிடத்தில்
வாருங்கள், நான்தருவேன் ஓய்வு

மத்தேயு 11:28

உன்வாசல் தட்டுகிறேன், கேட்டுவந்தால், வாழ்ந்திருப்போம்,
உன்னுடன்நான் என்னுடன் நீ

வெளிப்படுத்தின விஷேசம் 3:20

No comments: