இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 27, 2017

கலிகாலம்.... இன்று !



1016)
தேர்தரவே அந்நாளில் ஆளுண்டு, தொண்டைக்கு
நீர்தரவும் ஆளில்லை இன்று


1017)
பின்நின்று தூற்றும் உறவுண்டு, முன்வந்து
தூக்கத்தான் ஆளில்லை இன்று


1018)
மலர்ந்தால் மதிப்பது உதிர்ந்தால் மிதிப்பது
உலக இயல்பானது இன்று


1019)
கதைகட்டும் கூட்டம் நினைத்தால் எதையும்
சிதைத்து விடக்கூடும் இன்று


1020)
உதவிக்குத் தட்டும் பொழுது கதவுகள்
கல்லாகிப் போகிறது இன்று

1 comment:

ராஜி said...

உதவிக்குத் தட்டும் பொழுது கதவுகள்
கல்லாகிப் போகிறது இன்று
..............
நிஜம்.... கூடவே செல்பியும் எடுத்துக்குது