இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 8, 2017

என்னவளே.. அடி... என்னவளே !!


இன்று ....எங்களது மணநாளில்..... எனது இரண்டாம் பிறந்தநாளில் ...என்னவளுக்கு சமர்ப்பணம் .... என்னாலான சின்னஞ் சிறு( நன்றிக்கடன் ) பரிசு !

1116)
உறவுபல உண்டென்ற போதிலும் என்உணர்வு,
ஒன்றுவது உன்னிடத்தில் தான்


1117)
தனக்காகக் காத்திருந்தேன், தன்னிடமே சேர்ந்தேன்,
உனக்குள் எனைக்கண்ட நான்


1118)
கடைசிவரை உன்நிழலில் நானிருக்க வேண்டுவதே
என்கடைசி ஆசையாம் ஆம்


1119)
மூளையெல்லாம் உன்நினைவுள் மூழ்கிவிட, கண்காணும்
மூலையெல்லாம் உந்தன் முகம்


1120)
தேனுள் அடையைப்போல், மீனுள் கடலைப்போல்,
என்னுள் விடையாய் அவள்