எறும்பைப் புசிக்கும் எதுவும் இறந்தால்
அதனைப் புசிக்கும் எறும்பு
482)
மயிர்நீத்தால் வீழும் கவரிமான்; அந்த
மயிர்சார்ந்து தான்வாழும் பேன்
483)
இளமைக்கு உணவாம் கனவு; கனவும்
வளரும் இளமையைத் தின்று
484)
ஆடால் அழியும் செடி;மரமாய் மாறிவிட்டால்
ஓடியதன் கீழொதுங்கும் ஆடு
485)
புழுஉண்டு மீனாகும்; மீனுண்டு நாமாவோம்;
நாமாவோம் மீண்டும் புழு
Tweet | |||||
No comments:
Post a Comment