இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 13, 2015

வாழ்க்கை ஒரு வட்டம் !


481)
எறும்பைப் புசிக்கும் எதுவும் இறந்தால்
அதனைப் புசிக்கும் எறும்பு


482)
மயிர்நீத்தால் வீழும் கவரிமான்; அந்த
மயிர்சார்ந்து தான்வாழும் பேன்


483)
இளமைக்கு உணவாம் கனவு; கனவும்
வளரும் இளமையைத் தின்று


484)
ஆடால் அழியும் செடி;மரமாய் மாறிவிட்டால்
ஓடியதன் கீழொதுங்கும் ஆடு


485)
புழுஉண்டு மீனாகும்; மீனுண்டு நாமாவோம்;
நாமாவோம் மீண்டும் புழு

No comments: