இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 9, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்


சொல் /பொருள்

246)
செல்லும் இடத்தில்உன் சொல்செல்லும் தன்மையின்
உண்மை அறிந்துபின் சொல்

247)
சோதனையில் உள்ளோர்முன் நாம்செய்த சாதனையைப்
போதனை செய்யாமல் செல்

248)
மந்தைவெளி முன்நின்று சிந்தைவழி செல்என்(று)
உரைத்தால் பயனென்ன சொல்

249)
நாவினைச் சேர்ந்ததல்ல சொல்வலிமை; கேட்டறியும்
காதினைச் சார்ந்த(து) அது

250)
துடித்தும் வெடித்தும் எதிர்க்கும் பொழுதும்
தடித்தசொல் வேண்டாம் தவிர்

No comments: