இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 17, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்




ஊடல்...சிறிதே ஊடல்...என்றாலும் !
/இன்பம்

251)
எதிர்வர வேண்டுமெனத் தானெதிர் பார்த்தேன்;
எதிரியாய் வந்தாளே முன்


252)
பந்தம்தான் உண்டாக்க வந்தாய் என்றிருந்தேன்;
பந்தம்ஏன் கொண்டுவந்தாய் நீ


253)
ஆற்றுக்கு போகிறாள் யாரோடோ; ஆறோடும்
போனால் என்ன எனக்கு


254)
நீராடப் போகிறாள் ஆற்றுக்கு; நீரோடு
போனால் மகிழ்ச்சி எனக்கு


255)
துடிப்பாய் நடப்பாள்; துடுக்காய் இருப்பாள்;
கடுக்காய் கொடுப்பாள் எனக்கு

No comments: