இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

May 1, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


நாட்டு நடப்பு :
91)
பலவேசம் காட்டும்; பலவாசம் கூட்டும்;
இலவசம் கண்டால் பதுங்கு

92)
ஆற்றில் படகிருந்தால் போற்றித் தலைவணங்கு;
ஊற்றிலது கண்டால் ஒதுங்கு

93)
நெஞ்சில் நிலைக்கும்;கால் நீட்டும் வரையிலும்
பிஞ்சில் புகட்டும் கருத்து

94)
விலையேற்றம் பாழும் நிலத்துக்கும் உண்டு;
நிலைமாற்றம் என்ப(து) இயல்பு

95)
பழிகூறிப் பம்முதல் பண்பாமோ?; பாரில்
வழியறியாப் பாதையும் ஏது!

No comments: