இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

February 1, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


எல்லாம் அவள் :

40)
படித்தேன் அவளின் மடலை; அடைந்தேன்

படித்தேன் குடித்த உணர்வு



41)
நெஞ்சமெங்கோ பெண்பின் அலைந்திருக்க; கொல்லுமிங்கே

கொஞ்சமே மீந்த நினைவு


42)
பொழுதெல்லாம் என்னுள் விழுதாகிப் பூப்பாள்;

பழுதாகிப் போகும் மனது



43)
குளித்தவளைக் கண்டேன்; குழித்தவளை ஆனேன்;

வளியெல்லாம் எந்தனிசைப் பாட்டு


44)
மொய்க்கும்உன் கண்ணுக்(கு) இணையில்லை; இவ்வுலகை

மொய்யெழுதி வைப்பேன் அதற்
கு

No comments: