இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

February 13, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

நாட்டு நடப்பு :
49)
தாழ விடாமல்தன் தோள்கொடுப்பான் தோழன்;உன்
தோள்தாழத் தொங்குபவன் வேறு

50)
நெல்லையை தில்லையை சென்னையையும் தாண்டுநீ
எல்லையெல்லாம் இல்லை உனக்கு

51)
முயல்பவரை முன்மொழியும் வெற்றி; தயங்குபவர்
பின்னால் ஒளியும் அது

52)
ஈசலுக்கும் கூட இணையில்லார் காட்டுவார்
ஈசனுக்கும் மேல்தம்மை இங்கு

53)
தேவையெல்லாம் தத்தளிப்போர்க்(கு) ஓர்துடுப்பு; வேண்டாம்
குளிர்காய அங்கோர் அடுப்பு

No comments: