இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

February 6, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

விலங்கும் விளக்கும் :

45)
படம்பார்க்கப் பேராவல் கொண்டேன்; படர்ந்ததென்
தோள்மேல் கருநாகம் ஒன்று


46)
ஏய்த்திழுக்கும் எண்ணத்தில் இன்சொல் வலைவீசும்
மேயவந்த மாயமான் கன்று


47)
தட்டில் அதற்கும்தான் உண்டே சரிஉரிமை;
விட்டிலுக்கேன் இல்லை பகல்


48)
சாயும் பழத்தோட்டக் காவல் விலகினால்
பாயும் பசித்த கிளி

No comments: