செய்தி : உத்திரப்பிரதேசம் .. அரசு மருத்துவமனை...ஆக்சிஜன் பற்றாக்குறை..60மணி நேரம் .. 70குழந்தைகள் மரணம்
1051)சிசுசிதைமேல் நின்று பசுவதைப் போக்க
நடக்கிறது போராட்டம் நன்று
1052)
பிஞ்சென்றால் என்ன, பணம்கொஞ்சம் பாக்கிவைத்தால்
பிய்த்தெறிய அஞ்சாது அரசு
1053)
எரிவாயு ஏனென்று சொன்னது உயிர்வாயு
வீணென்று நின்றது அரசு
1054)
பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றும் பதறாத
வஞ்சகர்க்கு வைப்போம்வா நஞ்சு
1055)
நம்பிவந்த பிஞ்சுகளைக் காப்பாற்றா நண்பா!ஏன்
இவ்வாழ்வு, நாண்டுகொண்டு சாவு
Tweet | |||||
2 comments:
பரிதாபம்!
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
குரங்குகள் கையில் கிடைத்த பூமாலைகள் கதையாக ஆகிவிட்டது.
Post a Comment