இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

August 29, 2017

நபிமொழி - 22 :- மது !

என்குறள் / துரைக்குறள் :- 1071 - 1080

மதுவை ஒதுக்கு !
உருமாற்றம் செய்து மதுவை உணவாய்த்
தருவதற்கும் உண்டு தடை
......................முஸ்லிம் 4014

பயம்தரும்நோய் ஒத்த மதுவை, மருந்தாய்ப்
பயன்படுத்த உண்டு தடை
........................முஸ்லிம் 4015

மது,சூது கொண்டுதரும் கேடென்பது இம்மை
மறுமையைத் தாண்டிப் பெரிது
................... குர்ஆன் :02:219

போதை தருமனைத்தும் மார்க்கத்தின் பாதையில்
தள்ளிவைக்கப் பட்டது தான்
......................முஸ்லிம் 4067

திராட்சையுள், பேரீச்சை யுள்,உணவும் நன்மைத்
தராதழிக்கும் பாழ்மதுவும் உண்டு
..................குர்ஆன் :16:76



மதுவோடு வரும் அழிவு !
தொழுவாய் முறையாய், தவிர்ப்பாய்த் தொழுகயை,
போதைத் தெளியாத போது
......................குர்ஆன் :04:43

மதுவை அருந்தத் தடைஉண்டு அதுபோன்று
விற்கவும் உண்டு தடை
...............................முஸ்லிம் 3220

மதுவுக்கு உருதருவோர் விற்போர் பருகுவோர்,
சுமப்பார் இறையின் பழி
..............................இப்னுமாஜா 3371

மதுவை அருந்தி மதியை இழப்போர்,
மிதிக்கப் படவேண்டும் ஆம்
...........................புகாரி 2316

குடிப்போர்க்கு மும்முறை சாட்டையடி காட்டு,
தொடர்வோரை சாவுக்குள் ஓட்டு
....................... அபுதாவூத் 3886

No comments: