இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 23, 2017

பழமொழி.. சொலவடை... தெளிவோம் - 3


அன்று....அருமையான பொருள் பொதிந்து உலவிவந்த பழமொழிகள்.... இன்று மறுவி... தவறான பொருள் தரும் பழிமொழிகளாக மாறி, நடைமுறையில் புழக்கத்திலும் உள்ளன .. அவற்றின் உண்மைப் பொருளை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியின் மூன்றாம்படி இது ...

961)
வந்தான் அரக்கன் மயில்உருவில். கந்தன்
கவனம் கவண்அரு கில்

(கவண் – கவட்டை, ஆயுதம்)
[பழிமொழி - கந்தன் கவனம் கவட்டையில்..]

962)
வாழ்நாளில் ஆநெய்க்கு முன்காலம், பூநெய்க்குப்
பின்காலம்
தந்தோர்க்கு வாழ்வு
(ஆநெய்=பசுநெய், பூநெய்=தேன்)
[பழிமொழி - ஆனைக்கொரு காலம், பூனைக்கொரு காலம்..]

963)
தேர்ந்தெடுத்துப் பந்திக்க முந்து, சேர்ந்தபின்
படைக்கச் சிலகாலம் பிந்து,
(பந்திக்க – இணைபார்க்க, படைக்க – குழந்தைபெற)
[பழிமொழி - பந்திக்கு முந்து..... ]

964)
களவும் கவறு(ம்) அற,அதற்குக் கற்றக்
களவோடு கத்து மற
(கவறு – சூது, அற - தவிர், கத்து – பொய், கயமை )
[பழிமொழி - களவும் கற்று மற ..]

965)
ஆடியில் வீசும் அடர்காற்று பட்டவுடன்
அம்மை* பறந்து விடும்
(*நோய்)
[>பழிமொழி - ஆடிக்காற்றில் அம்மி பறக்கும்..]

No comments: