இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 24, 2017

நபிமொழி - 20 :- இறையின் கணக்கு...!


உறவுகளுக்கு.... ரமலான் வாழ்த்துகள்
துரைக்குறள் :- 966 - 970

நன்றொன்றைச் செய்ய நினைத்தவுடன் உன்கணக்கில்
சேர்ந்துவிடும் நன்றின் பலன்
................... புகாரி 6491

அந்நன்றைச் செய்து முடித்தவுடன் உன்கணக்கில்
கூடிவிடும் நன்றுபல நூறு
..................... புகாரி 6491

பலனெதிர் பாராமல் நன்மையைச் செய்தால்
பலனுண்டு பத்து மடங்கு
...................... முஸ்லிம் 5215

நன்மை புரிவோர்க்குக் கண்மறைந்து காத்திருக்கும்
கண்குளிர வைக்கும் பரிசு
..................... குர்ஆன் 32:17

நன்மையைக் கொண்டு வருவோர்க்கு, அதைவிட
நன்மை அமைந்து விடும்
..................... குர்ஆன் 28:84

No comments: