இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

May 22, 2017

பழமொழி.. சொலவடை... தெளிவோம் - 2


அன்று....அருமையான பொருள் பொதிந்து உலவிவந்த பழமொழிகள்.... இன்று மறுவி... தவறான பொருள் தரும் பழிமொழிகளாக மாறி, நடைமுறையில் புழக்கத்திலும் உள்ளன .. அவற்றின் உண்மைப் பொருளை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியின் இரண்டாம்படி இது ...

என்குறள்:931 - 935
மண்குதிர்-ஐ நம்பி, நடுஆற்றில், தங்கிய
தண்ணீரில் கால்வைத்தால் தப்பு
(மண்குதிர் – மண் மேடு)
[அ]
மங்குதிரை மேல்முழு நம்பிக்கை வைத்து,ஆற்றில்
கால்வைத்தால்
ஆகிவிடும் தப்பு
(மங்குதிரை – கலங்கிய நீர்பரப்பு)
[பழிமொழி - மண்குதிரையை நம்பி.... ]

ஆயிரம் பேருக்கு போய்ச்சொன்னால் ஆகிவிடும்
நின்ற திருமணமும் நன்று
[பழிமொழி - ஆயிரம் பொய்சொல்லி.....]

ஆயிரம் வேரை அறிந்துகொண்டால் தானொருவன்
ஆவான் அரைமருத்து வன்
[பழிமொழி - ஆயிரை பேரைக் கொன்றவன்....]

நல்லமாடு என்றால் நிலையாய் வலுவாய்
தெளிவாய் பதிக்கும் சுவடு
[பழிமொழி - நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ]

ஆதானம் செய்யாத செட்டியார் தன்கடமை
ஆற்றாமல் போனவர் ஆம்
[பழிமொழி - ஆதாயம் இல்லாமல் செட்டியார்.....]

2 comments:

ராஜி said...

தெளிந்தேன்

duraian said...

நன்றி .. இன்னும் வரும்