இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

May 15, 2017

நபிமொழி - 19 :- மும்முறை..! மும்முறை...!! மும்முறை.... !!!



என்குறள் ;- 926 -930
உம்உரை உள்வரையில் சென்றடைய வேண்டுமெனில்
மும்முறை சொல்லி விடு
............................ புகாரி 94

ஒருமுறை மேலும் ஒருமுறை மேலும்
ஒருமுறை போதும் உரை
............................ புகாரி 6337

இறையை நெருங்கும் கவியை வரவேற்க
மும்முறை கேட்பான் அவன்
......................... முஸ்லிம் 4540

’பொருள்வந்த பின்’உதவும் உந்தன் உறுதியை
மும்முறை தந்து விடு
..............................முஸ்லிம் 4632

கெட்டக் கனவெதும் கண்டால் தொழும்முன்
இடப்பக்கம் மும்முறை துப்பு
.............................. முஸ்லிம் 4550

தாய்க்குப்பின் தாய்க்குப்பின் தாய்க்குப்பின் தான்வாய்க்கும்
தந்தையெனும் பந்தச் சிறப்பு
.......................... புகாரி 5971

(+)
குடிப்போர்க்கு மும்முறை சாட்டையடி ஊட்டு
தொடர்வோர்க்கு சாவினைக் காட்டு ........................ அபுதாவூத் 3886


No comments: