இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 9, 2017

நம்பிக்கை... தன்னம்பிக்கை !!


( + )
856)
நம்பிக்கை வெற்றிதரும்; வெற்றியோ நம்பிக்கை
வைத்திருந்தால் தானே வரும்


857)
தன்னடக்கம் கொண்டிருப்போர் தம்முள்;தன் நம்பிக்கை
தன்னால் விளைந்து விடும்


858)
தன்திறத்தை நம்புபவர் தானே பெறுவாராம்
எந்திரத்தை வெல்லும் வரம்


( - )
859)
மனதிடம் இல்லாதான் கொண்ட உடல்பலத்தால்
என்னபலன் வந்து விடும்


860)
தன்திறன்மேல் நம்பிக்கை வைக்காத வாழ்வாகும்
தண்ணீரின் மேல்வரையும் கோடு

1 comment:

Yarlpavanan said...

நன்றே சிந்திப்போம்