இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 19, 2017

நபிமொழி - 17 ....இருபக்கமும் அறிந்த நடுநிலையாளன் !



தராசியல் ! ... வட்டவியல் !! ..

குறளுக்கான குறிப்புகளைத் தேடி..இறையின் அறிவுரைகளுக்குள் அலையும் வேளையில் ... பல ஆர்வமூட்டும் கோணங்கள் என்வலையில் கிடைத்தன . அதில் ஒரு பார்வைதான் இங்கே தொடர்வது .
உலகின் கட்டுக் கோப்பான வாழ்வுக்கு... அறிவுரைகளை கட்டளைகளை சட்டமாக விளக்கமாகத் தந்திருக்கும் இறைவன் .. வேறுபல இடங்களில் அவற்றிற்குச் சில விலக்குகளும் அளித்திருக்கிறான்...
வீட்டுக் கூடத்தில் எல்லாரும் இருக்கும் போது பேரப்பிளைகளிடம் ’’ஏய்ய்ய்ய்.. அதைச் செய்யாதே .. இதைச் செய்யாதே” கடுமை காட்டும் ’ஸ்ட்ரிக்ட்டு’தாத்தா ... கூட்டம் கலைந்த பிறகு ... தானும் குழந்தையாகி “இப்போ சரி...இனிமேல் இதுபோலச் செய்யாதீங்க.. ஆமா”என்று குதூகலமாவதுபோல .... தம் மக்களுக்காக இறங்கும் இறையை/இறையின் மொழியை பல இடங்களில் கண்டேன்

என்னள்வில் இது ஒரு புதிய பார்வை ...ஒரு முயற்சி.. ஒரு கோணம்... அவ்வளவே . இது மற்றவருக்கும் ஏற்புடையதா என்று அறியவே இங்கு பதிகிறேன் .. ஆன்றோரும் சான்றோரும் கருத்துரைத்தால் மட்டுமே மேலும் தொடர்வேன்.

என்குறள்: 895 – 905

1.வாழ்த்து . ( முதலில் வாழ்த்தில் இருந்தே ஆரம்பிப்போம். )
சிறியோர் பெரியோர்க்கும் செல்வோர் இருப்போர்க்கும்
நல்வாழ்த்து சொல்லிடவேண் டும்
புகாரி 6231

வாழ்த்தப் படும்போது அதைவிட நன்றாக
அல்லது அதைப்போன்று வாழ்த்து
குர்ஆன் 04:86
#முதலில் ....யார் முதலில் வாழ்த்த வேண்டும் என்று ஒரு குறிப்பு .
தொடர்வது ...வாழ்த்தைப் பெறுபவருக்கான குறிப்பு . அவர் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் இது அவருக்கும்பொருந்தும் .. எனில் இங்கு அந்த வாழ்த்து வட்டம் பூர்த்தியாகி விடுகிறது

2.மரியாதை
எழுந்துநிற்க வேண்டும்; இறந்தஉடல் உன்னை
விலகிக் கடக்கும் வரை
முஸ்லிம்1745

வரும்போது எழுந்துபிறர் நிற்க நினைப்போர்;
நரகத்துள் போய்ச்சேர்வார் ஆம்
அபுதாவூத் 4552
#இறுதி ஊர்வலம் ஒன்று நம்மைக் கடந்து செல்லும் பொழுது எழுந்து நிற்க வேண்டும் என்பது கடமை . நாம் வரும்போது பிறர் எழுந்து நிறக வெண்டும் என விரும்பொவோர் ... முதல் குறிப்பை மட்டும் அறிந்தார் எனில் ... இனி அது போல வாழ்வில் விரும்புவதற்கான வாய்ப்பே இருக்காது  ஒரு வட்டம் பூர்த்தியாகி விடும்


3.கடுமை.
கொடுத்தக் கடனை அடைய கடுஞ்சொல்
கூற அனுமதி உண்டு
புகாரி 2306

கடனைத் தராதார் இடத்தில் கடுமையைக்
காட்டார்முன் சொர்க்கம் வரும்
முஸ்லிம்3180
#சட்டப்படி.. கடனை வசூல் செய்ய கடுமை காட்டச் சொல்லும் இறை... தர்மப்படி ...இல்லாரின் சூழலை மனதில் கொண்டு ... மிகப் பெரிய பலன் தரும் இரண்டாம் குறிப்பைத் தருகிறாஜ்ன் .. இதை அறிந்துவிட்டால் ... அந்த முதல் சூழல் நிகழாமலேயே போய்விடும்  ஒரு வட்டம் பூர்த்தியாகி விடும்


4.நேர்த்திக் கடன்
நன்றெதுவும் தந்துவிடாது என்பதால் உண்டுதடை
நேர்த்திக் கடன்செய்வ தற்கு
புகாரி 3370

கஞ்சன் மறைப்பதும் கொஞ்சம் வெளிப்படும்
நேர்த்திக் கடன்மூலம் ஆம்
புகாரி 3370
#செயலுக்குத் தடை விதித்தித்து விட்டு ... பின்... ”சரி மூடர்கள் செய்துவிட்டுப் போகட்டும்.. அப்பொழுதாவது பதுக்கிவைத்திருப்பதில் ஒரு பகுதியாவது வெளிவந்து ... இல்லாருக்கும் பயன்படும்” என்று இளகி வருவான் இறை. இங்கும் ஒரு வட்டம் பூர்த்தியாகி விடுகிறது


5.விருந்தோம்பல்
உறவோடு ஒருவர் அழைப்பின்றி வந்தால்
உறவாடி வைப்பாய் விருந்து
முஸ்லிம்4141

உறவின் வரவேற்கும் பண்பை அறிந்து
விருந்தில் புதியவரைச் சேர்
முஸ்லிம்4143
#விருந்தளிப்போரிடம் “திடீரென்று .. சொல்லாமல் ஒருவர் , கூடுதலாக வேறுஒருவரையும் சேர்த்து அழைத்து வந்துவிட்டார் எனினும் வரவேற்று விருந்து வை” என்று சமாதானம் செய்யும் இறைவன்...
விருந்துக்கு போவோரிடம் “ அங்கே வருந்தளிப்போரின் மன்நிலை, குணநலம் அறியாமல் .. புதித்தாய் ஒருவரை சொல்லாமல் சேர்க்காதே” என்று எச்சரிக்கையும் செய்வான் இறை . இரண்டும் சரியாய்ப் புரிந்து கொள்ளப் படுமாயின்... ஒரு வட்டம் பூர்த்தியாகி விடும்

2 comments:

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் ... உங்கள்மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக //சிறியோர் பெரியோர்க்கும் செல்வோர் இருப்போர்க்கும்
நல்வணக்கம் செய்திடவேண் டும்// வணக்கம் இறைவனுக்கு மட்டுமே உரியது ... இங்கு இறைஞ்சுதலை அல்லது நலன் நாடுதலை அல்லது ஸலாம் உரைத்தலை வணக்கம் என பொருள் கொள்ளக் கூடாது.

duraian said...

வாழ்க உறவுகள் ... //ஸலாம் உரைத்தல் /// தமிழில் எப்படி சொல்ல வேண்டும் எனத் தாருங்கள் எனக்கு
/////1. Obedience; வணக்கம். 2. Manners; மரி யாதை/// வணக்கத்துக்கு ம்ரியாதை செலுத்துதல் என்று தமிழ்பல்கலைக்கழக அகராதியில் பொருள் இருக்கிறது ... மேலதிகத் தகவல் தந்தால் நான் திருத்திக் கொள்வேன் ஐயா