326)
கண்ணோடு கண்நோக்கி கன்னம் உருவாக்கும்
உன்நோக்கம் தானென்ன கூறு
327)
நோக்கும்உன் கண்செய்யும் தாக்கம் மிகப்பெரிது;
நோக்கும்முன் தோற்பேன் இனி
328)
தேவையைத் தானுணர்ந்து முன்வந்து தீர்த்துவைக்கும்
தேவதையைக் கொண்டவனாம் நான்
329)
சுற்றுமுற்றும் யாருமின்றிப் போனாலும் சுற்றி
வருமவளே என்வாழ்வின் அச்சு
330)
மடியில் துயில்வேன்: விழிக்கும் வரையில்
விடியலே வேண்டாம்நீ போ
Tweet | |||||
2 comments:
மடியில் துயில்வேன்: விழிக்கும் வரையில்
விடியலே வேண்டாம்நீ போ
அருமை... எல்லாமே அருமை....
வாழ்த்துக்கள் சார்...
நன்றி நண்பரே
Post a Comment