இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 12, 2013

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்


வாழ்வின் அச்சு :

326)
கண்ணோடு கண்நோக்கி கன்னம் உருவாக்கும்
உன்நோக்கம் தானென்ன கூறு

327)
நோக்கும்உன் கண்செய்யும் தாக்கம் மிகப்பெரிது;
நோக்கும்முன் தோற்பேன் இனி

328)
தேவையைத் தானுணர்ந்து முன்வந்து தீர்த்துவைக்கும்
தேவதையைக் கொண்டவனாம் நான்

329)
சுற்றுமுற்றும் யாருமின்றிப் போனாலும் சுற்றி
வருமவளே என்வாழ்வின் அச்சு

330)
மடியில் துயில்வேன்: விழிக்கும் வரையில்
விடியலே வேண்டாம்நீ போ

2 comments:

'பரிவை' சே.குமார் said...

மடியில் துயில்வேன்: விழிக்கும் வரையில்
விடியலே வேண்டாம்நீ போ

அருமை... எல்லாமே அருமை....

வாழ்த்துக்கள் சார்...

duraian said...

நன்றி நண்பரே