இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 22, 2013

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-பொருள்


சிலவரிகள் உனக்காக :



321)
நீரோடும் பாதையில் தேரோட்ட வேண்டுமெனில்
போராட வேண்டும் உணர்

322)
தன்திறன்மேல் பற்றுக் குறைந்தால் அதுகேடு;
தண்ணீரின் மேல்வரையும் கோடு

323)
விழுந்தெழுந்தால் முன்வந்து தான்நிற்கும் வெற்றி;
விழித்தெழுந்தால் வாரா(து) அது

324)
கிட்டும் நிலையில் இருப்ப(து) எதற்குனக்கு;
எட்டாத் தொலைவே இலக்கு

325)
வான்கடக்கும் நீள்சிறகு உண்டுனக்கு; ஏறிவர
ஏணிஎதிர் பார்த்தால் இழுக்கு

No comments: