இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 12, 2013

இருவரியில் சொல்வேன்...இருப்பதைச் சொல்வேன் - தூதுக்குறள் / அறம்


விதைகள் :
அவன்
முறைவைத்(து) உதவிக்(கு) அழைக்கும் வரையில்
மறைந்திருக்க மாட்டான் இறை [336]

கடவுளைக் காண கடஉள்; கடந்துவிட்டால்
நீயே கிடைக்கலாம் அங்கு
[337]
அம்மா
தூய்மைக்கு மேலேதும் இல்லையிங்கு; ஆனாலும்
தாய்மைக்குப் பின்தான் அது [338]

அப்பா
சிந்தை சிதறாமல் முன்னேRuRறு; தந்தையின்
பாதையிலுன் எண்ணம் செலுத்து [339]

ஆசான்
ஏணியாய் நிற்பாராம்; ஏற்றி விடுவாராம்;
தானிருப்பார் தன்நிலைமா றாது [340]

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/1.html) சென்று பார்க்கவும்... நன்றி...