இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 5, 2013

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்


பிறந்த நாள் பரிசு :)


316)
நிலவோ உலகிலோர் அங்கம்; உலவும்
இவளோ உலகம் எனக்கு

317)
தலையணையா வேன்;தழுவிக் கொண்டே துயில்வாள்;
நிலையிணை உண்டோ இதற்கு

318)
நகம்கடித்துத் துப்புவாள்; குட்டி நிலவாய்
முகம்காட்டும் என்னுள் அது

319)
பூவிரல் கொண்டு சொடுக்கெடுப்பாள்; பூவுலகில்
ஈடில்லை ஏதும் இதற்கு

320)
இசைக்குத் தலையசைப்பாள்; என்னுள் திசைகள்
கலங்கும் இசைவெனக் கொண்டு

No comments: