இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

February 13, 2013

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்


காதலோ,,காதல்


311)
யுத்தமொன்று சத்தமின்றி முற்றுமின்றி நீண்டிருக்க
முத்தமிட்டுத் தந்தாள் குறிப்பு

312)
நாணாமல் போய்நீ வழங்கு சிறுநகை;
காணாமல் போகும் பகை

313)
நீவருவாய் என்றிருந்தேன்; வந்தாய் நகையோடு;
நீவருவாய் என்றானாய் இன்று

314)
மானாக ஆண்மருக; ஆணாக பெண்உருக
தேனாகும் காதல் உறவு

315)
நானென்(று) அவன்விஞ்ச ஏனென்(று) இவள்கொஞ்ச
வீணாகிப் போனான் அவன்

No comments: