காதலா..என் காதலா........
301)
என்தாகம் என்னென்(று) அறிந்தும்ஏன் என்வலையுள்
வந்தின்றும் சிக்கவில்லை நீர்
302)
நீர்சேர்ந்தால் நெல்சோறு; மண்சேறு; தேன்சாறு;
நானென்ன ஆவேனாம் கூறு
303)
உம்வாசம் நானுணர்ந்தேன்; தன்வேசம் தானுதறி
முன்வாசல் ஓடும் மனது
304)
ஒத்த அதிர்வெண்ணோ(டு) ஒன்றாய் அலைவரிசை
வாய்த்தவன் வந்தமைந்தால் தேன்
305)
சொல்லாமல் ஆறாது; சொன்னாலும் தீராது
சொல்லடா என்செய்ய வென்று
Tweet | |||||
No comments:
Post a Comment