இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

November 22, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்

என்னதான் செய்வேன் நான் ?


286)
பழத்தோடு காத்திருப்பாள் என்றோடி வந்தேன்;
பழத்தோடு தானிருந்த(து) அங்கு

287)
கல்போன்ற சொல்கொண்டு வீசுவாள்; கல்க்கண்டாய்
பூச்செண்டாய் வீழும்என் மேல்

288)
சொல்லும்ஓர் வார்த்தையையும் வாய்க்குள் முடக்கிவிடும்
வெல்லும்கூர் வேலொத்த கண்

289)
தோள்த்தாங்கும் முன்தொங்கும் ஆல்விழு(து); ஆள்த்தாக்கும்
முந்தும்உன் கண்ணீர் விழுது

290)
மின்னஞ்சல் வேகத்தை மிஞ்சும்உன் கண்ணஞ்சல்
கண்டவுடன் அஞ்சும் மனம்

No comments: