இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

November 14, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்

எல்லாம் அவளே:



276)
பிணக்கில் விழவைப்பாள்; நானறிவேன் இன்று
கணக்கில் சிலஇழப்பேன் என்று

277)
கொழுந்துவிட்டாள் என்னுள்; இடம்கொடுத்தேன்; பற்றிக்
கொளுந்துவிட்டால் என்செய்வேன் நான்

278)
கண்ணாடி முன்னாடி நான்நிற்பேன்; உள்ளிருந்து
என்கண்ணுள் பார்ப்பாள் அவள்

279)
ஓர்வார்த்தை சொல்லாள்;கூர்ப் பார்வையால் கொல்வாள்;ஆம்
போரின்றி வெல்வாள் இலக்கு

280)
இதழ்சுழிப்பாள்; ஆழ்சுழலில் சிக்கிய பூவின்
இதழாக மூழ்கும் மனது


No comments: