இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 7, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


நாட்டு நடப்பு :
76)
செல்பேசி வண்டியில் நீசென்றால்; சொல்லாமல்
வந்துன்முன் நிற்பான் எமன்

77)
குறிகேட்டால் வேண்டுவ(து) ஆகா(து); இலக்கைக்
குறிவைக்க வேண்டும் அதற்கு

78)
இல்லாமை இல்லாமல் போக்கிட இல்லையென்ற
சொல்லையே இல்லாமல் ஆக்கு

79)
வீழ்ந்தவுடன் முற்றா(து) எதுவும்; எழுந்துநின்று
வாழ்வதற்குத் தானே பிறப்பு

80)
வண்ணமுண்டு; எண்ணமுண்டு; உன்மனத் திண்மையின்றேல்
மண்ணாம் வரையும் படம்

No comments: