இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 2, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


அவள் :
70)
வாள்புருவம் வில்லாக; கூர்க்கண்கள் வேலாக
ஆளானேன் வேட்டை இலக்கு

71)
விடும்கதையை நம்புவது போலிருப்பாள்; நண்பா;
விடுகதையின் மூலம் அவள்.

72)
சொல்லடி என்றேன்; சுழன்றேதான் நான்வீழ்ந்தேன்;
சொல்லடி பட்ட பிறகு

73)
வைத்ததோ பெண்ணவள் மேல்அன்பு; வந்தென்னைத்
தைத்த்தோ மன்மதன் அம்பு

74)
தீயில்லை; ஆனாலும் தீய்கிறேன்; காதலில்
தீதில்லை என்பது பொய்

75)
மருதாணி நாவசைத்தாள்; நானானேன் இங்கு
திருகாணி இல்லாக் கொலுசு

No comments: