அவள் :
70)
வாள்புருவம் வில்லாக; கூர்க்கண்கள் வேலாக
ஆளானேன் வேட்டை இலக்கு
71)
விடும்கதையை நம்புவது போலிருப்பாள்; நண்பா;
விடுகதையின் மூலம் அவள்.
72)
சொல்லடி என்றேன்; சுழன்றேதான் நான்வீழ்ந்தேன்;
சொல்லடி பட்ட பிறகு
73)
வைத்ததோ பெண்ணவள் மேல்அன்பு; வந்தென்னைத்
தைத்த்தோ மன்மதன் அம்பு
74)
தீயில்லை; ஆனாலும் தீய்கிறேன்; காதலில்
தீதில்லை என்பது பொய்
75)
மருதாணி நாவசைத்தாள்; நானானேன் இங்கு
திருகாணி இல்லாக் கொலுசு
Tweet | |||||
No comments:
Post a Comment