இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

May 14, 2017

பழமொழி.. சொலவடை... தெளிவோம் - 1 (0 - 5)


அன்று....அருமையான பொருள் பொதிந்து உலவிவந்த பழமொழிகள்.... இன்று மறுவி... தவறான பொருள் தரும் பழிமொழிகளாக மாறி, நடைமுறையில் புழக்கத்திலும் உள்ளன .. அவற்றின் உண்மைப் பொருளை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியின் முதல்படி இது ...

என்குறள்:921 - 925

பெண்கள் பற்றிய பழமொழிகளின் உண்மை நிலவரம் :
சேல்அகட்டிச் சாலையில் ஆள்வரப் பார்த்திருக்கும்
மாதரை நம்பிவிடா தே
(சேல் – கண்)
[மூலம்- சேலை கட்டிய மாதரை நம்பாதே]


உண்டி சுருக்கும் வழியை அறிந்தோரின்
பண்டிக்குக் சேரும் அழகு
(உண்டி – உணவு , பண்டி – வயிறு)
[மூலம்- உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு]

மாமி உழைத்தால்மண் ணுக்குஉரம் ஆகும்
மருமகளால் பொன்னுக்கு உரம்
[மூலம்- மாமியார் உடத்தால் மண்குடம்...... ]

பெண்புத்தி என்பதோர் ஆணின்பின் நின்றவனை
முன்செலுத்தும் புத்தியா கும்
[மூலம்- பெண்புத்தி, பின்புத்தி]

தாய்மேல் பழிசொல்லிக் கொல்வோரும் நீர்மேல்
பிழை
கண்டு சொல்வோரும் ஒன்று
[மூலம்- தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே]

2 comments:

Massy spl France. said...

நல்ல விளக்கங்கள். அறிய கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

ராஜி said...

விளக்கங்கள் அருமை