இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 25, 2014

இயற்கையும் ஆசானே ...!


மரக்குறள் / பொருள்


381)
அழிவில்லை என்போர் அறிந்ததில்லை போலும்
கிளையில் இலையின் நிலை

382)
பழம்மட்டும் தானா அழகு; பழுத்து
விழும்இலையும் தானே அழகு

383)
ஆல்வைத்து வாழ்ந்தார்நம் முன்னோர்; வளர்ந்ததை
ஆள்வைத்துச் சாய்க்கிறோம் நாம்

384)
வாழைதலை சாய்ப்பது தன்குலையைக் காப்பதற்கு;
கோழைத் தனத்தினால் அன்று

385)
முயற்சி விதையாம்; முளைத்தால் மரமாம்;
புதைந்தால் உரமாம் பிறர்க்கு


No comments: