இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 27, 2014

இருவரியில் சொல்வேன்...இருப்பதச் சொல்வேன் - தூதுக்குறள் / பொருள்


விழி,அறி...! :)

366)
விடியும் வரையில் முடங்கிக் கிடந்தால்
விரைந்து முடியும் பொழுது

367)
முடிந்த வரையில் முடக்கம் தவிர்த்தால்
விரைந்து விடியும் பொழுது

368)
தலையில் இருந்தால்தான் கூந்தல்; தரையில்
கிடந்தால் அதன்பெயர் வேறு

369)
பாதி வரையும் படித்தறியும் பாடம்தான்
மீதி வழியின் விளக்கு

370)
ஒருவிரல் முன்சுட்ட மற்றதுமேல் நோக்க
மறுமூன்றும் காட்டும்உன் நெஞ்சு

No comments: