இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

April 2, 2014

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-அறம்


(இறை)அவன் வணக்கம்:

356
அருவில் உருவாய்; கருவில் தருவாய்
மறைந்தே இருப்பான் அவன்

357
உருவில் அருவாய்; தருவில் கருவாய்
உறைந்தே இருப்பான் அவன்

358
வெளியில் வளியாய்; வழியில் ஒளியாய்
நிறைந்தே இருப்பான் அவன்

359
அறியார்க்(கு) அரியன்; அறிதற்(கு) எளியன்
அடியர்க்(கு) அடியன் அவன்

360
வினையறுக்க வேண்டும்; முடிக்கும் வரையில்
துணையிருக்க வேண்டும் அவன்
.

No comments: