4 ஆண்டுகளுக்குமுன்... ஒன்றுமில்லாமல் வேடிக்கைப் பார்க்க வந்தவனை.... ஊக்குவித்து இன்று 2000+ குறள்களுக்குச் சொந்தக்காரனாக மாற்றி வைத்திருக்கும் என் இணைய உறவுகளுக்கு நன்றிக் கடனாக என் செய்யப்போகிறேன் நான் ?
இதுதான் நாம்வாழும் உலகு :
296)
ஒன்றழித்து இன்னொன்று வாழும் உலகிலின்று
ஒன்றுபட்டால் தானுண்டு வாழ்வு
297)
பாதை வழியெல்லாம் பாறை இறைந்திருந்தால்
பாதவலி ஏற்பதுதான் தீர்வு
298)
திட்டம் தெரிந்தோரைக் காட்டிலும் திட்டத்
தெரிந்தோரே வல்லவராம் இன்று
299)
கூசாது கையேந்தும் கீழோர்நம் முன்வந்தால்
பேசா(து) ஒதுங்குதல் நன்று
300)
பாடுபட்டோர் பாதையில் ஓய்ந்திருப்பார்; கேடுகெட்டோர்
போதையில் ஓய்வெடுப்பார் பார்
Tweet | |||||
1 comment:
துரையெழுதும் குறள் வெண்பாக்களின் பொருள் தினத்தந்தி படிப்போருக்கும் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். இவற்றில் தமிழும் இருக்கிறது. காலத்திற்கேற்ற பொருள் பொதிந்த கருத்தும் இருக்கிறது.
Post a Comment