
என் உலகம் :
141)அப்பா :
சிந்தனையின் வித்தவர்; நீவாழ தன்னையே
விற்றவர்;உன் தந்தையைப் போற்று
142) அம்மா :
மடியில் வளர்த்தாள்; வடிவம் கொடுத்தாள்
விடியல் அவள்தான் உனக்கு
143)
உறியாய் தறியாய் திரியாய் இருப்பாள்
உயிரும் தருவாள் உனக்கு
144)
கொடியிலுயிர் தந்து மடியிலூண் தந்துன்
படியாய் இருப்பாள் பணிந்து
145) இரண்டாவது அம்மா :
நிலவுக்கும் உண்டாம்ஓர் நாள்ஓய்வு; நில்லாள்;
நிலவுக்கும் மேலாம் இவள்
Tweet | |||||
No comments:
Post a Comment