இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

July 3, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


முதுமை அழகு :

121)
கணக்கில்லை என்னவர் காட்டும் இடக்கு;
கனக்கவில்லை இன்றும் எனக்கு

122)
இறுக்கம் நிறைந்த(து) இளமை! இருக்கட்டும்!
இந்தச் சுருக்குக்கே(து) ஈடு

123)
முகவரி இல்லாது முன்புண்டு; இன்றுன்
முகவரிக்குள் வாழ்கிறேன் நன்று

124)
எனக்கென வீழும் முதல்மழையும் நீ!எனக்குள்
வாழும் முதல்துளியும் நீ

125)
அன்று பதுமையாய் நீஅழகு: இன்றுன்
முதுமை அழகோ அழகு

No comments: