அவல்..அவள். .அவல்:)
106)
நினைவிலவள் வந்தவுடன் பெய்து நனைக்கிறதென்
தோட்டத்தை மட்டும் மழை
107)
விழியென்னும் வேலெய்து வீழ்த்தினாள்; வீழ்ந்தும்
வலியில் உணர்ந்தேன் இதம்
108)
வருவாய் வடிவெனக் காத்திருந்தேன்; வந்த
விடிவோ வருவாய் இழப்பு
109)
கொல்லையில் பூத்திருக்கும் முல்லைக்கும் உண்டு;உள்ளம்
கொள்ளை அடிக்கும் திறம்
110)
மங்கைக்கென் மீதேதோ கோபம்: நிகழ்வெண்ணி
மங்கத் தொடங்கியதென் கண்
..விடாது வருவேன்..:)
Tweet | |||||
No comments:
Post a Comment