இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

June 22, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


தமிழ் வாழ்த்து :
101)
புகழ்வோர்க்கும் நின்றே இகழ்வோர்க்கும் நன்றே
நிகழ்த்திடுவாள் என்தமிழ்த் தாய்

102)
கொன்றாலும் மென்றுநீ தின்றாலும் நின்று
நிலைத்திடுவாள் என்தமிழ்த் தாய்

103)
கழுத்துக்கும் கொண்ட எழுத்துக்கும் ஆயுதம்
கண்ட(து) எமது தமிழ்


குறள் வாழ்த்து :
104)
திருமால் திருவடிக்கும் அய்யன் இருஅடிக்கும்
மிஞ்சிய(து) ஏதுமுண்டோ இங்கு

105)
சித்தரும் ஈசனும் நேசனும் புத்தரோ(டு)’
அல்லாவும் ஏற்பார் குறள்

No comments: