மகளதிகாரம் / /என்குறள் 426 - 435
பால் மாற்றி இதை மகனதிகாரம் எனவும் கொள்ளவும் :))
”என்ன படிக்கிறாய்” என்றேன்; ”படிநீயும்”
என்றுதந்தாள் பாதி கிழித்து
(கரு: நன்றி: Mohamed Ismail Buhari M )
கிறுக்குவாள்; ”என்னஇது” என்பேன்; ”குரங்கு”என்பாள்;
மாறும் குரங்காகக் கோடு
”ஒருஊர்ல” என்றுநான் சொன்னதையேச் சொன்னாலும்
கேட்பாள்; புதியது போன்று
’நரிபாட்டி காக்காக் கதை’யின் நெறியென்ன
என்கிறாள்; என்சொல்வேன் நான்
படித்தாள் மடித்தாள்பைக் குள்திணித்தாள்; வாய்த்தால்
கிடப்பேன்; அவள்கைமுன் தாள்
நடைபயில முந்தும் உனக்கு குடைபிடிக்க
ஏங்கும் உலவும் நிலவு
தூக்கம்:
______________
தூக்கத்தில் புன்னகைக்கக் கற்றுத் தருமவளை
ஏக்கத்தில் பார்த்திருப்பேன் நான்
மூடிக் கிடக்கும் இமையினுள் ஓடி
அலையும் விழிகள் அழகு
அலைபேசியில் (கடல்கடந்த) தந்தை:
___________________________________________
காதுக்குள் ”அப்பாவா?” என்றகுரல் கேட்டவுடன்
கண்ணில் கசியும் கடல்
காதுக்குள் ”அப்பா-வா!” என்றகுரல் கேட்டவுடன்
கண்ணில் கசியும் கடல்
Tweet | |||||
1 comment:
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
Post a Comment