இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 8, 2014

பெண்ணே...பெண்ணே....!


391)
பால்நிலவைப் பாற்கடலில் தோய்த்(து)அவள்முன் போஎன்றேன்;
மேலும் வெளுத்த(து) அது

392)
மானவளை வென்றுவிட்ட பின்பு; துவண்டதுகண்(டு)
ஆனேன்நான் அம்புபட்ட ஒன்று

393)
மயிலும் துயிலும் ஒயிலாள்; குயிலும்
பயிலும் ஒலியாள் இவள்

394)
எனதளவில் எல்லாம் எளிதென்று இருந்தேன்
உனதழகைக் காணும் வரை

395)
உந்தன் இருவிழியில் முந்தும் சிறுதுளியும்
எந்தன் கருத்தழிக்கும் அம்பு

No comments: