அவளைப் பற்றி(ய) நான் :
346)
கண்ணில் வெடிவைத்துக் காத்திருப்பாள்; கண்ணிவெடி
தோற்றணையும் கன்னியிவள் முன்பு
347)
கதிர்அரிவாள்க் கூர்கண் அவளுக்கு; எதிர்வருவாள்
என்செய்யப் போகிறேன் நான்
348)
வாழப் பிடிக்கும் இடமெது வென்பேன்;உன்
தோள்தான(து) என்பாள் பிடித்து
349)
முப்பொழுதும் உன்நினைவே தானென்றேன்; மூச்செறிந்தாள்
எப்பொழுதும் ஏனில்லை என்று
350)
மீனானால் வீழ்ந்திருப்பேன்; மானானால் வாழ்ந்திருப்பேன்
தானாக உன்வலைக்குள் நான்
Tweet | |||||
No comments:
Post a Comment