இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label earth day. Show all posts
Showing posts with label earth day. Show all posts

April 22, 2015

இலவு காக்கும் உழவு ...!


476)
சாகுபடி வேண்டுமென்று சாயா(து) உழைத்திருப்பார்;
ஆகுமடி நல்விளைச்சல் அங்கு

477)
உழவுக்குப் பின்பும் களைவளர்ந்தால் உந்தன்
உழைப்பில் பிழையென்று கொள்

478)
வான்பொழிந்தும் மண்விளைந்தும் நல்லவிலை இல்லையெனில்
வீணாகும் ஏரின் உழைப்பு

479)
உழுவான் விழுவான் எழுவான்; அவனிங்கு
அழுதால் நமக்கே இழுக்கு

480)
விளைநிலம் எல்லாம் விலைநிலம் ஆனால்
நிலையென்ன ஆகும் இனி