இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label இயல்பு. Show all posts
Showing posts with label இயல்பு. Show all posts

February 13, 2013

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-பொருள்


இயல்பு!!!!!!!


306)
அரவமின்றி வந்தமைதி கொன்று விரைந்து
மறைவ(து) அரவம் இயல்பு

307)
வேகமாய் வந்து பயம்தந்து வந்தவழிப்
போவ(து) அலையின் இயல்பு

308)
தண்டின்மேல் தங்கி இருந்தாலும் வண்டினைத்
தேடுவது மொட்டின் இயல்பு

இயல்பு?!?

309)
ஆளில்லா ஊரில் அடுத்தடுத்துத் தேரிழுக்க
நாட்குறித்தல் மூடர் இயல்பு

310)
தோள்வலிமை தானழகு; பாழும்தோல் பின்சென்று
வீழ்வ(து) உலகின் இயல்பு