இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label வெண்பா - கடவுள். Show all posts
Showing posts with label வெண்பா - கடவுள். Show all posts

September 29, 2014

அவனிடமும் பேசுவேன் நான் !


இறைவன் / அறக்குறள்
386)
கடவுள்நீ என்முன் வரவேண்டும் என்றேன்;
கடஉள்நீ என்றான் அவன்


387)
வருவாய் குருவாய்; மலர்வாய் ஒருவாய்;
வருவாய் அதுவே எனக்கு


388)
தருவாய் தரிசனம் கண்ணுக்(கு); அதுபோல்
தருவாய் வருமோ எனக்கு


389)
கற்பனையாய்க் கற்பானை; சொற்பனையாய் விற்பானை;
அற்பனெனை காத்தணைப்பாய் நீ


390)
கறைகள் மறைந்து மறைகள் அறிய
இறைமுன் கரைதல் முறை

September 23, 2009

உணர்ந்து கொள்


நாடெல்லாம் ஆண்டவனைத் தேடும் உடலுக்குள்
ஆடாமல் உட்கார்ந்தி ருப்பாரவர் - நாடாமல்
இல்லாரைக் காக்கும் எளிய மனதுக்குள்
சொல்லாமல் வாழ்ந்திருப் பார்

[ நேரிசை / இருவிகர்பம் ]