இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label மோர். Show all posts
Showing posts with label மோர். Show all posts
August 22, 2017
பாட்டி வைத்தியம் - 5 _ மோர்...மோர்...மோர்
1056)
கம்பங் களியோடு மோர்கலந்து உண்போர்முன்
பம்மும் வெளிஉலவும் சூடு
1057)
நெய்சேர்த்த வெந்தயத்தை மோர்கலந்து உண்பவர்க்கு
வாய்க்கும் வலிக்கா வயிறு
1058)
மோரை அருகம்புல் சாறுடன் உட்கொண்டால்
நீரிழிவு கட்டுப் படும்
1059)
பித்தம் கபம்வாதம் என்னும்முக் குற்றம்
சமப்பட,மோர் நாளும் குடி
1060)
மோர்,மிளகு கச்சக்காய், பச்சிலை, வெந்தயம்
நீர்க்கட்டிப் போக்கும் மருந்து
Subscribe to:
Posts (Atom)

