இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label ரமலான். Show all posts
Showing posts with label ரமலான். Show all posts

June 24, 2017

நபிமொழி - 20 :- இறையின் கணக்கு...!


உறவுகளுக்கு.... ரமலான் வாழ்த்துகள்
துரைக்குறள் :- 966 - 970

நன்றொன்றைச் செய்ய நினைத்தவுடன் உன்கணக்கில்
சேர்ந்துவிடும் நன்றின் பலன்
................... புகாரி 6491

அந்நன்றைச் செய்து முடித்தவுடன் உன்கணக்கில்
கூடிவிடும் நன்றுபல நூறு
..................... புகாரி 6491

பலனெதிர் பாராமல் நன்மையைச் செய்தால்
பலனுண்டு பத்து மடங்கு
...................... முஸ்லிம் 5215

நன்மை புரிவோர்க்குக் கண்மறைந்து காத்திருக்கும்
கண்குளிர வைக்கும் பரிசு
..................... குர்ஆன் 32:17

நன்மையைக் கொண்டு வருவோர்க்கு, அதைவிட
நன்மை அமைந்து விடும்
..................... குர்ஆன் 28:84

June 6, 2016

நபி மொழி - 9 .... ரமலான் நோன்பு ...!


என்குறள் : 741 - 750

முஸ்லிம் 1956
நரகம் அடைபடும், சொர்க்கம் திறக்கும்
ரமலான் தொடங்கும் பொழுது


புகாரி 2008
நன்றெதிர் பார்க்கும் ரமலான் தொழுகைமுன்;
நின்குறைமன் னிக்கப் படும்


முஸ்லிம் 1958
பிறைபார்த்து நோற்று; பிறைபார்த்து நோன்பைத்
துறப்பது மார்க்க மரபு


முஸ்லிம் 1990
கரும்பொருள் கண்மறைந்து, வெண்பொருள் முன்தெரியும்
வேளைக்குள் உண்டு பருகு


முஸ்லிம் 2004
விரைந்துதன் நோன்பைத் துறந்து, விரைந்து
தொழுவோர் இறைக்கு விருப்பு


முஸ்லிம் 2023
தன்னடக்கம் கொண்டோர்தாம் நோன்பிருக்கும் அன்று
துணையோடு இருந்தாலும் நன்று



முஸ்லிம் 2119
தானேமுன் வந்(து)அவன் நன்செய்வான்; நோன்பில்
உணவை உணர்வைவிடு வோர்க்கு


முஸ்லிம் 2093
இருபெரு நாளிலும் நோன்பில் இருப்பதற்கு
மார்க்கத்தில் உண்டு தடை


புகாரி 1975
பகலெல்லாம் நோன்பிருந்த பின்இரவு எல்லாம்
தொழுவதற்கு உண்டு தடை