இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label பகை. Show all posts
Showing posts with label பகை. Show all posts

April 24, 2017

துரோகம் ...! விரோதம் ...!!

911)
துரோகத்தால் வீழ்ந்தோரின் எண்ணிக்கை இன்று
விரோதத்தில் வீழ்ந்தோர்க்கும் மேல்


912)
பிறர்வாழ வேண்டுவோர் வீழ்ந்தால்; அவர்சரிவின்
பின்இருப்பார் வாழும் பிறர்


913)
விரோதியிடம் போய்த்தானாய் வீழ்ந்தாவது உந்தன்
துரோகியின்முன் வாழ்ந்து விடு


915)
விரோதம்தான் வீரனின் வாழ்விற்கு அழகு;
துரோகத்தால் சேரும் இழுக்கு


915)
விரோதியைக் கண்டால் பொருது; துரோகியைக்
கண்டால் விரைந்து விலகு

April 29, 2016

பகைச் சிறப்பு ...!



676)
உனைஅறிய வேண்டுமெனில் உற்றுப்பார் உன்பகையை;
எல்லாம் தெரியும் அவர்க்கு


677)
சிறந்த எதிரியைத் தேர்ந்துன் உறவாக்கு;
எதிர்காலம் ஆகும் இலகு


678)
பகைத்தும்உன் அந்தரங்கம் காக்கப் படுமென்றால்;
அப்பகையை நட்பாக்கிக் கொள்


679)
வெற்றி அடைந்திட வேண்டுமெனில்; சுற்றி
இருந்திட வேண்டும் பகை


680)
புகையும் மனம்கொண்ட நட்பைவிட; கொல்லும்
பகையின் உறவு சிறப்பு


April 4, 2016

எதிரியை முதலில் அறி !


621)
பலம்கொண்டோம் என்று பலரைப் பகைத்தால்
பயனின்றிப் போய்விடும் வாழ்வு

622)
எதிரியில்லை என்றாலும் வீழ்த்திவிடும்; வீழ்த்த
எதிரியில்லை என்னும் செருக்கு

623)
தனைஎதிரி தாண்டும் பொழுது; தளைஉதறி
முந்தார்முன் நிற்கும் முடிவு

624)
எதிர்க்க முடியாத ஒன்றெதிர் நின்றால்
தவிர்த்து விடுவது நன்று

625)
பெறப்போகும் வெற்றிஉன் முன்வரப் போகும்
எதிரின் திறத்தைப் பொறுத்து